தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! - சென்னையிலும் உயர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 29, 2021

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! - சென்னையிலும் உயர்வு!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! - சென்னையிலும் உயர்வு!

தமிழகத்தில், நேற்றை விட இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆயிரத்து 859 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. நேற்று 1,756 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று, 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1 ஆயிரத்து 859 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,053 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் சென்னையில், இன்று ஒரே நாளில், 181 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதே போல், கோவை மாவட்டத்தில், 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 28 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad