எடப்பாடிக்கும் ஒபிஎஸ்சுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அதிமுக முன்னாள் உறுப்பினர்: பின்னணியில் சின்னம்மா!
15 நாட்களுக்குள் அதிமுக பிரமுகர் சுரேஷ் அவர்களை நீக்கியதாக கொடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எடப்பாடி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேலம் மாவட்ட மீனவர் அணி செயலாளராக எடப்பாடி சுரேஷ் பதவி வகித்து வந்தார். இவர் 1991ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்த சூழலில் எடப்பாடி சுரேஷுக்கு சின்னம்மா என அழைக்கப்படும் விகே சசிகலாவிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து விகே சசிக
இதைத் தொடர்ந்து சுரேஷ் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த 5ஆம் நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்னர்
இந்நிலையில் கட்சியிலிருந்து தொண்டர்களை நீக்குவதற்கு கழக விதிகளில் 35ஆவது விதி உட்பிரிவு 12 படி பொதுச் செயலாளருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என காரணம்காட்டி விளக்கம் கோரி எடப்பாடி சுரேஷ் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அதிமுக தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
இல்லையென்றால் 15 நாட்களுக்குள் எடப்பாடி சுரேஷ் நீக்கியதாக கொடுக்கப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
No comments:
Post a Comment