எடியூரப்பா ராஜினாமா: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் ரேஸில் யார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 26, 2021

எடியூரப்பா ராஜினாமா: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் ரேஸில் யார்?

எடியூரப்பா ராஜினாமா: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் ரேஸில் யார்?

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஆனால், அக்கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பம், ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டியது உள்ளிட்டவைகளால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்று தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதனிடையே, முதல்வர் எடியூரப்பா மீது அவரது கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர். வெளிப்படையாக அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவின் தலையீடு ஆட்சியில் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

எடியூரப்பாவுக்கு 78 வயதாகி விட்டதால், பாஜக கட்சியின் எழுதப்படாத விதியின்படி பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டது. இதனால், எடியூரப்பாவின் பதவிக்கு எந்த நேரமும் சிக்கல் வரலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று எடியூரப்பா அறிவித்தார். தனது ஆட்சி காலத்தில் ஏராளமான சிக்கல் ஏற்பட்டதாகவும், முள்படுக்கை போன்று இருந்ததாகவும், ஆட்சிக்காலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டது என்றும் எடியூரப்பா கருத்து தெரிவித்தார்.




இந்த நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் அம்மாநில ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் கர்நாடக சட்டப்பேரவை கலைந்துள்ளது. புதிய முதல்வர் பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராக எடியூரப்பா பதவியில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக வாக்கு அரசியலில் முக்கிய பங்காற்றும் பஞ்சமசாலி லிங்காயத்துக்கள், தங்களது சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த சமூகத்தை சேர்ந்த பாஜகவினர் பசன்கோடா ராமன்கோடா பாடீல் யாட்னல், அர்விந்த் பெலாட், முருகேஷ் நிராணி ஆகியோர் முதல்வர் ரேஸில் முதல்கட்ட பட்டியலில் உள்ளனர்.


குறிப்பாக, சுரங்கத்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி கடந்த ஞயாற்றுக்கிழமை டெல்லி சென்றிருந்தார். ஆனால், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி செல்லவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பெயரும் ஆலோசனையில் உள்ளது.

கவுடா சமூகத்துக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் கொடுத்தால் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சதானந்த கவுடா, சிடி ரவி ஆகியோர் முதல்வராக வர வாய்ப்புள்ளது. அவர்கள் தவிர அதே சமூகத்தை சேர்ந்த முத்த தலைவர்கள் ஆர்.அசோக், சி.என்.அஷ்வத்நாராயண் ஆகியோரும் உள்ளனர்.

அண்மை காலமாக தலித் முதல்வர் வர வேண்டும் என்ற பேச்சுகள் பாஜகவுக்குள் பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது. துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல், பி.ஸ்ரீராமலு ஆகியோர் அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றனர். ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் பெயரும் ஆலோசனையில் உள்ளது. அதேசமயம், முதல்வர் பதவிக்கு தீவிரமாக முயற்சித்து வருகிறார் என்ற தகவலை கர்நாடக விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் மறுத்துள்ளார். தான் அந்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை என்றும், எந்த பொறுப்பு கொடுத்தாலும் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad