எம்ஜிஆர் இல்ல என்ற தைரியத்துல அந்தம்மா பேசுறாங்க... சசிகலாவை கலாய்க்கும் செல்லூர் ராஜூ!
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
மதுரையில் ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் தன்னுடைய தொகுதியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கொரோனோ தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறார். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் பின்தங்கி உள்ளது.
ஆனால் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தங்களது ஆட்சியின்போது தடுப்பூசி மீதான நம்பிக்கையை கெடுத்தவர்கள் தற்போதையை ஆளும் கட்சியினர்.
முன்னாள் சுகாதார துறை அமைச்சரை குறை கூறுவதை தவிர்த்துவிட்டு முதல்வர் கொடுத்துள்ள அமைச்சர் பணியை செம்மையாக செய்ய வேண்டும் என மருத்துவ துறை அமைச்சருக்கு அறிவுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment