10 ஆண்டுகளில் இதுதான் முதன்முறை: ஸ்டாலின் செய்த ‘நச்’ காரியம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

10 ஆண்டுகளில் இதுதான் முதன்முறை: ஸ்டாலின் செய்த ‘நச்’ காரியம்!

 10 ஆண்டுகளில் இதுதான் முதன்முறை: ஸ்டாலின் செய்த ‘நச்’ காரியம்!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்று பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்றார். அன்று முதல் முதல்வராக ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக, திமுக கொண்டு வந்த நலத்திட்டங்கள், அமைத்த குழுக்கள், முதல்வர் தொடங்கி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரை அவர்களது நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் திமுக மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் இந்த முறை வந்து விடக் கூடாது என்பதிலும் ஸ்டாலின் கவனமாக உள்ளார். 100 நாட்கள் நிறைவடைந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான பதவியேற்றதிலிருந்து நடக்கும் சில நிகழ்வுகள் தமிழ்நாடு புதிய அரசியல் கலாச்சாரத்தினை நோக்கிச் செல்கிறது என்னும் உணர்வைத் தோற்றுவிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் கூடுதல் வலு சேர்த்து வருகின்றன. மாணவர்களுக்கான புத்தகப்பைகளில் ஜெயலலிதா, ஈபிஎஸ் படங்களே இருந்து விட்டு போகட்டும் என்று சொன்னது, சட்டசபையில் தன்னை புகழ்ந்து பேச வேண்டாம் என்று சொன்னது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் அதற்கு உதாரணமாக உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இல்லாத நடைமுறை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் மாற்றிக் காட்டியுள்ள சம்பவம் சட்டப்பேரவையில் அரங்கேறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெறாமல் இருந்தன. இதனை தற்போது மாற்றிக் காட்டியுள்ள ஸ்டாலின், கேள்வி நேரத்தில் தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் ஒருவர் கேள்வி நேரத்தில் பதிலளிப்பது இது முதன்முறை என்பதால் ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



சட்டமன்றப் பேரவையில், வினா-விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி எழுப்பிய முதல்வர் வசம் உள்ள காவல்துறை பற்றிய கேள்விகளுக்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்திலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad