ஊரடங்கிற்கு எதிராக போராட்டம்: 250 பேர் கைது!
ஆஸ்திரேலிய நாட்டில், ஊரடங்கு கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய 250-க்கும் மேற்பட்டோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆஸ்திரேலியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையவில்லை. பல்வேறு நகரங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும், மிகப்பெரிய நகரான, சிட்னி, மெல்போர்ன்,
தலைநகர் கான்பெர்ரா ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று குறையவில்லை.
இதை அடுத்து மேற்கண்ட மூன்று நகரங்களிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி பொது மக்கள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு அறிவிப்பை எதிர்த்து, ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஒருசில இடங்களில் காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் காவல் துறையினர் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மொத்தமாக 250 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகளை மீறியதால், பல நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment