ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுகவினர், கொடநாடு வழக்கில் நீதி கேட்டு வந்த நிர்வாகிகள் - காங்.எம்எல்ஏ பளிச் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுகவினர், கொடநாடு வழக்கில் நீதி கேட்டு வந்த நிர்வாகிகள் - காங்.எம்எல்ஏ பளிச்

ஈபிஎஸ்க்கு எதிராக அதிமுகவினர், கொடநாடு வழக்கில் நீதி கேட்டு வந்த நிர்வாகிகள் - காங்.எம்எல்ஏ பளிச்

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. வழக்கின் குற்றவாளிகள் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சாட்சி அளித்துள்ள நிலையில் மாஜி அமைச்சர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ளக்கோரி காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை சபாநாயகரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவுக்கு சபாநாயகர் அனுமதியளித்தால் சட்டப்பேரவையில் கொடநாடு விவகாரம் குறித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ள போது, கொடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா? என்றும் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சி தலைவருக்கு மன ரீதியான துன்புறுத்தலை அளிக்கின்றனர் என செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள செல்வப்பெருந்தகை, '' ராஜேஷ்குமார் நாவலை விட கொடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன. கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற விதமாக ஜெயக்குமார் ஏன் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்.


கொடநாடு விவகாரத்தை சட்டப்படி அணுக திராணி இல்லாமல், அதிமுக பதறி அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்ப்பது ஏன்? தமிழ்நாட்டின் ஆட்சி மையமாக திகழ்ந்த கொடநாட்டை மையமாக கொண்டு கொலை, கொள்ளை நடந்துள்ளது; நீங்களாவது எங்களுக்கு நீதி பெற்றுத்தாருங்கள் என சில அதிமுகவினர் என்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad