சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்? சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்? சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதம்!

சென்னை வெள்ளத்துக்கு யார் காரணம்? சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதம்!

ஜெயலலிதா முதல்வராக பதவிவகித்த போது 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டன. பல வீடுகள் நீரில் மூழ்கின. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவம் குறித்து இன்று சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஏரிகள் மற்றும் கால்வாய்களை சரியாக தூர் வாராததாலும் 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னரே ஏரி நீரை திறந்துவிடாத காரணத்தாலுமே சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அணைக்கட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தெரிவித்தார்
இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்கட்சி தலைவரான அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, “நேற்று இரண்டு மணி நேரம் பெய்த மழையிலேயே சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் 2015ஆம் ஆண்டு ஒரு நாளில் மட்டும் 60 மில்லி லிட்டர் கனமழை பெய்த காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்துவிட பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி மொத்தமாக நீர் வெளியேறியதை அடுத்து சென்னை நகர் பகுதியில் வெள்ளநீர் ஓடியது” என விளக்கம் அளித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad