ஊட்டிக்கு டூர் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த சூழலில் கொரோனா தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இன்று (ஆகஸ்ட் 23) முதல் புதிய தளர்வுகளை தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் சுற்றுலா தலங்களில் பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா தலங்கள் திறப்பு
இதையொட்டி சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகை புரியத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசின் அறிவிப்பை நீலகிரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், மலைப் பிரதேசமான நீலகிரியின் மீது அனைவருக்குமே ஈர்ப்பு உண்டு. பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவர்.
மீளும் பொருளாதாரம்
அரசின் வழிகாட்டுதல்களை சரியான முறையில் பின்பற்றுவோம். சரிந்த சுற்றுலா துறையின் பொருளாதாரம் மீண்டு வர பெரிதும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதேபோல் டூரிசிஸ்ட் கேப் உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊட்டியில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகம்,
No comments:
Post a Comment