'அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்' - ஒய்வு பெறும் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

'அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்' - ஒய்வு பெறும் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை

'அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்' - ஒய்வு பெறும் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கிருபாகரன் ஆகஸ்ட் 20 அன்று ஓய்வு பெறுகிறார். 2009 ல் கூடுதல் நீதிபதியாக சேர்ந்த கிருபாகரன், 2011 ல் நிரந்தர நீதிபதியாக உயர் நீதிமன்ற பெஞ்சில் நியமிக்கப்பட்டார். இதுவரை, இவர் 492 தீர்ப்புகளை வழங்கியுள்ள நிலையில் பிற நீதிபதிகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் இவரது 143 தீர்ப்புகள் மேற்கோள் காட்டி வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டாய ஹெல்மெட், டிக்டாக், ஆன்லைன் ரம்மிக்குத் தடை மற்றும் கொரோனா காலத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது வரை சமூக அக்கறை சார்ந்த வழக்குகளில் கிருபாகரன் அதிக அக்கறை செலுத்தியவர். இந்நிலையில் நாளையுடன் கிருபாகரன் ஒய்வு பெறுவதால் நீதிபதிகள் அவருக்கு இன்று சென்னையில் பிரிவு உபச்சார விழா நடத்தினர்.

அப்போதும் மக்கள் நலனுக்கான சில கோரிக்கைகளை வைத்த நீதிபதி கிருபாகரன், மக்களுக்காக அரசு மதுபானக் Clinking beer mugs கடைகளை மூட வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் பாதியாகவாவது குறைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

நீதிபதி கிருபாகரன் தமது 12 ஆண்டு கால நீதிமன்ற பணியில் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் பெரும்பாலும் தலைப்பு செய்தியாகிவிடும். அதில் சில,

''சிறையில் உள்ள குற்றவாளிகளை திருமணம் செய்யும் பெண்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் அவ்வாறு செய்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும்''

வீடுகள் நெருக்கடியை தீர்க்க மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்குவதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குவதை தடுக்க வேண்டும்



கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு காலக்கெடு கொடுக்க வேண்டும்.

ஆளும் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அரசின் கொள்கைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன

டிக்டாக் பதிவிறக்க தடை''

No comments:

Post a Comment

Post Top Ad