முடிவுக்கு வந்த ஆன்லைன் வகுப்புகள்: கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

முடிவுக்கு வந்த ஆன்லைன் வகுப்புகள்: கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி!

முடிவுக்கு வந்த ஆன்லைன் வகுப்புகள்: கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் மகிழ்ச்சி!


கொரோனா இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் தீவிரமடைந்தது. இதனால், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது.

இதனிடையே, கொரோனா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16ஆம் தேதியில் இருந்து செயல்படலாம் என்று அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக மருத்துவக் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதில், ஆராய்ச்சி மாணவர்களும் இறுதி ஆண்டு மாணவர்களும் 50 சதவீதம் கல்லூரிகளுக்கு வரலாம். மாணவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தியிருக்க வேண்டும். கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஆன்லைன் வழிக் கற்றலையே தொடரலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டிருந்தன.

அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் முடிந்து நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் கல்லூரிகளுக்கு உற்சாகமாக வருகை தந்துள்ளனர். சக நண்பர்களுடன் அமர்ந்து அவர்கள் மகிழ்ச்சியாக கல்வி கற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad