இலவச பஸ் பயணம்...சபையில் ஆண் வர்க்கத்துக்கு குரல் கொடுத்த எம்எல்ஏ!
மாநகர அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவை ஆண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் நேற்று எழுப்பினார்.
சபையில் அவர் பேசும்போது, " அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுவது போல், 60 வயதுக்கு மேற்பட்ட
ஆண்களும் இலவச பயணிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஆண்களும் இந்த அரசை வெகுவாக பாராட்டுவார்கள்.
நாகர்கோவில் - களியக்காவிளை வழித்தட சாலை .
நடந்து செல்வதற்கு கூட சிரமமாக இருக்கும் அளவுக்கு படுமோசமாக உள்ளது. இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்" என்று ஆண்வர்க்கத்தின் சார்பாக கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளி்க்கும்போது, "நாகர்கோவில் - களியக்காவிளை சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வருகிறது. அந் த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. சாலை விரைவில் சீரமைக்கப்படும்" என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
ஆனால் எம்எல்ஏ பிரின்சின் முக்கிய கோரிக்கையான ஆண்களுக்கு இலவச பஸ் வசதி குறித்து, போக்குவரத்து துறை அமைச்சரோ, அமைச்சர் மனோ தங்கராஜோ சபையில் விளக்கம் அளித்ததகா தெரியவில்லை.
No comments:
Post a Comment