அரசு ஊழியர்களுக்கு ஷாக்; தமிழக அரசு இப்படி செய்யும்ணு எதிர்பார்க்கல!
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஓர் அங்கமாக வழங்கப்படும் அகவிலைப்படி ஆனது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது விலைவாசியை ஈடுசெய்யும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.
அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
இந்த சூழலில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்குவர்கள் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நிதியமைச்சர் ப
ழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் ஒன்று முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பட்ஜெட்டில் ஏமாற்றம்
இந்த அறிவிப்பு அரசு ஊழியர் சங்கங்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொரோனாவை காரணம் காட்டி கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட சலுகைகள் திமுக ஆட்சியில் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பட்ஜெட் அறிவிப்பானது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1.1.2020
முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
28 சதவீத அகவிலைப்படி கோரிக்கை
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். வரும் 21ஆம் தேதி மாநில செயற்குழு கூடி தொடர் போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கு.குமரேசன் கூறுகையில், ஏற்கனவே கொரோனா தொற்றால் மூன்று அரை ஆண்டுகள் அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment