எடப்பாடியை சிக்க வைக்க சசிகலா போடும் திட்டம்: இது என்ன புது கதை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

எடப்பாடியை சிக்க வைக்க சசிகலா போடும் திட்டம்: இது என்ன புது கதை!

 எடப்பாடியை சிக்க வைக்க சசிகலா போடும் திட்டம்: இது என்ன புது கதை!

தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அதிமுக ஆட்டம் கண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்து யார் வீட்டில் ரெய்டுக்கு வரும், யார் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்படும் என்ற கேள்விகள் அக்கட்சியை சுற்றி வருகின்றன.
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி என அமைச்சர்கள் கட்டம் கட்டப்பட்டுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் எப்படி தப்பித்தார் என்ற பேச்சு எழுந்தது. சாலை ஒப்பந்தங்களில் 4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு என எடப்பாடி மீதும் பல புகார்கள் உள்ளன. இந்த சூழலில் தான் கொடநாடு விவகாரம் வெளியாகி எடப்பாடி பழனிசாமியை திக்குமுக்காடச் செய்துள்ளது

அதிமுகவுக்குள் எப்படி ரீ எண்ட்ரி கொடுக்க என சசிகலா யோசித்து வரும் நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சசிகலாதான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால் சசிகலா சிறை சென்ற நேரம் பார்த்து கட்சி, ஆட்சி என இரண்டிலும் தனது கரத்தை பலப்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் சசிகலா, தினகரன் ஆகியோரையும் கட்சியிலிருந்து நீக்கச் செய்தார்.

இதனால் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் சசிகலாவால் மீண்டும் அதிமுகவுக்குள் நுழையமுடியாமல் உள்ளது. நேரடியாக சசிகலாவை சந்திக்க அதிமுகவினர் தயங்குகின்றனர். இதை எல்லாம் கவனித்து சசிகலா ஒரு திட்டம் தீட்டியதாக கூறுகிறார்கள். கோபாலபுரத்துக்காரர் ஒருவர் மூலமாக சசிகலா திமுக தலைமைக்கு தூது விட்டதாகவும், அதன் பின்னரே கொடநாடு விவகாரம் சூடுபிடித்ததாகவும் கூறுகிறார்கள்.

இந்த விவகாரம் வெளியே வந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். தன்னுடைய சிறை நாள்களில் எப்படி தனக்கு எதிராக கட்சி மாற்றிவிடப்பட்டதோ அதே போல் எடப்பாடி பழனிசாமிக்கும் நடக்கும் என சசிகலா எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள் தி.நகர் அபிபுல்லா சாலையை சுற்றிவருபவர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad