டாஸ்மாக் கடைகளில் இப்படியொரு ஷாக்; கண்டுகொள்ளுமா தமிழக அரசு?
தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனையை டாஸ்மாக் கடைகள் மூலம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் தற்காலிக ஊழியர்களாக பணி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் தங்களை பணி நிரந்தரம்
செய்ய வேண்டும், பணி வரன்முறை செய்ய வேண்டும், சுழற்சி முறையில் பணியிட மாறுதல், விற்பனை நேரம் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழியர்களுக்கான சலுகைகள்
இந்நிலையில் சென்னையில் நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திருச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில்,
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சட்டப்படி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறை உள்ளிட்டவை அமல்படுத்தப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார்.
கைமாறிய பணம்
மேலும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் 26 ஆயிரம் ஊழியர்களுக்கு 18 ஆண்டுகளாக சட்டப்படியான சம்பளம் வழங்கப்படுவதில்லை. நுகர்வோர் விரும்பாத மது வகைகளை கடைகளில் விற்க திணிக்கப்படுவதாக கூறினார். மதுபான வகைகளின் கொள்முதலில் பெரிய அளவில் பணம் கைமாறுகிறது.
No comments:
Post a Comment