தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: தமிழ்நாடுதான் டாப்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: தமிழ்நாடுதான் டாப்!

 தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: தமிழ்நாடுதான் டாப்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் ரூ.935 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய தனிக்கையில் தெரிய வந்துள்ளது. இதில், ரூ.12.5 கோடி அளவிலான தொகை மட்டுமே திரும்ப வசூலாகியுள்ளது. இது மொத்த தொகையில் 1.34 சதவீதம் மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவு பொது களத்தில் இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் நெட்வொர்க் சிக்கல் காரணமாக அதனை அணுகுவது கடினமாக உள்ளது. இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டில் இந்த தரவுகளை பதிவேற்றத் தொடங்கியதிலிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒருமுறை நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 2.65 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad