இனி ரேஷன் கடையிலேயே எல்லாம், குடும்ப அட்டை தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!
ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாய விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றுக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில்,
அதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்
பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, எந்தவொரு அட்டைதாரரும் உதவி ஆணையாளர் / வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு இக்கோரிக்கை தொடர்பாக நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
அங்கீகார படிவத்தினை கடையிலேயே பெற்று கடையிலேயே மீள வழங்கி அதன் மீதான நடவடிக்கை கோருகையில், கடைப் பணியாளரே அப்படிவத்தினை தொடர்புடைய அலுவலருக்க
ு அனுப்பி அங்கீகரிக்கப்படும் நிலையில், அட்டை தாரர் எவரும் நேரடியாக அலுவலகங்களை தொடர்பு கொள்ளும் அவசியமில்லை. இதற்கு கடைப் பணியாளர் உரிய பதிவேடு தயார் செய்து போதிய எண்ணிக்கையில் அக்கோர படிவங்களை தனது கையிருப்பில் வைத்திருப்பது அவசியமாகும்.
No comments:
Post a Comment