நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழ்நாட்டை சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழ்நாட்டை சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு!

நல்லாசிரியர் விருது அறிவிப்பு: தமிழ்நாட்டை சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வு!

ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி, விக்யான் பவனில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். மொத்தம் 44 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad