தலிபான்களுக்கு ஆதரவு: எம்.பி., மீது தேச துரோக வழக்கு பதிவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

தலிபான்களுக்கு ஆதரவு: எம்.பி., மீது தேச துரோக வழக்கு பதிவு!

தலிபான்களுக்கு ஆதரவு: எம்.பி., மீது தேச துரோக வழக்கு பதிவு!

தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஷபீகூர் ரகுமான் பார்க் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதை அடுத்து தலிபான்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நபர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல் தலிபான் அமைப்பினரின் வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி கைப்பற்றியது குறித்து கருத்துத் தெரிவித்த உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மக்களவைத் தொகுதி எம்.பி., ஷபீகூர் ரகுமான் பார்க், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியா போராட்டம் நடத்தியது போல, தலிபான்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். தங்கள் நாட்டை தாங்களே ஆள எண்ணுகின்றனர். அது அவர்களின் உள்நாட்டு விவகாரம். அதில் நாம் எப்படி தலையிட முடியும்? என்றார்.



இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமாஜ்வாதி எம்.பி., ஷபீகூர் ரகுமான் பார்க் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad