ரகசியங்கள் அடங்கிய கொடநாடு பங்களா: அதிமுகவின் ஆவண காப்பகம்; சிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்!
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட் பங்களா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான இடம். அங்கிருந்து பல்வேறு அரசியல் முடிவுகளை அவர் எடுத்துள்ளார். இந்த கொடநாடு எஸ்டேட்டின் சொத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,
சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளனர். போயஸ் கார்டனில் எடுக்கப்படாத, விவாதிக்கப்படாத பல்வேறு விஷயங்களும் கொடநாட்டில் விவாதிக்கப்படும் என்கிறார்கள் அதனை பற்றிய விவரம் அறிந்தவர்கள்.
கொடநாடு எஸ்டேட் பங்களா அதிமுகவின் ஒரு ஆவணக் காப்பகமாகவே விளங்கியுள்ளது என்று கூறும் அவர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் பற்றி உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் அந்த பங்களாவிலேயே ரகசியமாக காக்கப்பட்டு வந்தது என்றும் தெரிவிக்கிறார்கள். அதிமுகவில் முக்கியப் புள்ளிகளாக வலம் வருபவர்கள் செய்யும் அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள்
சேகரிக்கப்பட்டு ஹார்ட் டிஸ்க்குகளாகவும், ஆவணங்களாகவும் அங்கு பாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கவும், அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கும் அந்த தகவல்கள் உதவியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட அதி முக்கியத்துவம் வாய்ந்த கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா சிறை சென்றதும் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம்
நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தது மேலும் அதிர்சியை ஏற்படுத்தியது. அதன் மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொல்லப்பட்டார். அங்கிருந்த கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். முக்கிய சாட்சியான கிருஷ்ணா பகதூர் இருக்கும் இடமும் தற்போது வரையில் தெரியவில்லை என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment