மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை தண்டிக்க வேண்டும் - கே. பாலகிருஷ்னன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை தண்டிக்க வேண்டும் - கே. பாலகிருஷ்னன்

மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை தண்டிக்க வேண்டும் - கே. பாலகிருஷ்னன்

சென்னை, எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதி 1-ல் குடிசை மாற்றுவாரியத்தின் சார்பாக ரூ.112.6 கோடி செலவில் 864 வீடுகள் கட்டித் தருவதற்குக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016-ல்) திட்டமிடப்பட்டு 2019-ல் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தம் ’பி.எஸ்.டி எம்பயர் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஏற்கெனவே இந்நிறுவனத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட கட்டுமானங்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே உடைந்து விழுந்துள்ளன என்ற தொடர் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. இதேபோல, அதிமுக ஆட்சி காலத்தில் ராமாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று குடியிருப்பும், பெரம்பலூரில் உள்ள குடியிருப்பும் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகி மாநில அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

இதனால், சம்மந்தப்பட்ட கன்ஸ்ட்ரக்ஷன் மீதும் அதிமுக துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும், அரசியல் வாதிகளும் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது ட்விட்டர் பக்கத்தில் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ''கே.பி.பார்க் குடியிருப்புகளைப் போலவே இப்போது பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரிய வீடுகளின் மீது புகார் எழுந்துள்ளது. தரமற்ற வீடுகளால் பண இழப்பு மட்டும் ஏற்படவில்லை, மிகப்பெரும் உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

எனவே, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுடைய தரத்தினை ஐ.ஐ.டி/அண்ணா பல்கலை நிபுணர்களையும், செயல்பாட்டாளர்களையும் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். எளிய மக்களின் உயிரோடு விளையாடியுள்ளவர்களை கண்டறிந்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்'' என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad