ஓணம் பண்டிகையை கொண்டாடிய கோவை மாணவிகள்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

ஓணம் பண்டிகையை கொண்டாடிய கோவை மாணவிகள்..!

ஓணம் பண்டிகையை கொண்டாடிய கோவை மாணவிகள்..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை போல கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அங்கு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
ஓணம் பண்டிகை கேரளா மட்டுமின்றி தமிழக கேரளா எல்லை மாவட்டங்களான கோவை, குமரி மாவட்டங்களிலும் உள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். அதுபோல தமிழக முழுக்க உள்ள கல்லூரிகளிலும் ஓணம் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்னையில், கேரள கலாசாரத்தின் படி ஆடைகள் அணிந்து இப்பண்டிகையை இளைஞர்களும், மாணவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. கேரள பராம்பரிய உடை அணிந்து மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் இணைந்து ஓணம் பண்டிகையினை நடனமாடியும், கயிறு இழுத்தல் என உற்சாகமாக கொண்டாடினர்.

No comments:

Post a Comment

Post Top Ad