ஈபிஎஸ்-ஓபிஎஸ் செய்த செயல்: உதயநிதி ஸ்டாலின் வேதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

ஈபிஎஸ்-ஓபிஎஸ் செய்த செயல்: உதயநிதி ஸ்டாலின் வேதனை!

ஈபிஎஸ்-ஓபிஎஸ் செய்த செயல்: உதயநிதி ஸ்டாலின் வேதனை!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திருத்திய நிதிநிலை அறிக்கை, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படதை தொடர்ந்து, அதன் மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, கூச்சலிட்டப்படி ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு, தனக்கான தருணத்தில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது சட்டமன்றத்தில் அவருக்கு முதல் உரையாகும். சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, கூட்டணி கட்சித் தலைவர்கள், சபாநாயகர் என அனைவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.

அப்போது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட விருப்பப்பட்டேன். ஆனால் அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர் என்று தனது வேதனையையும் அவர் வெளிப்படுத்தினார்.

தமிழக அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், கொரோனா நிலவரம், பஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகளை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதி மக்களுக்கு எப்போது உழைப்பேன் என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும், நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad