தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை; மாணவர்களுக்கு பெரிய ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை; மாணவர்களுக்கு பெரிய ஷாக்!

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை; மாணவர்களுக்கு பெரிய ஷாக்!

தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த ஓராண்டாக கல்லூரிகள் மூடப்பட்டு வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். இருப்பினும் முழுமையாக கற்றல் கிடைக்காததால், மாணவர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். நடப்பாண்டில் நிச்சயம் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஆன்லைன் விண்ணப்பங்கள்

இந்த சூழலில் கடந்த 10ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதையொட்டி கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கை எப்போது?

விரைவில் தர வரிசை பட்டியல் வெளியாகும். அதன் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம் என்று மாணவர்கள் கருதினர். ஆனால் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்து ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. அதற்கான தரவரிசை பட்டியலும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad