காங்கிரஸின் அடுத்த தலைவர் ஜோதிமணி? வரலாற்றை மாற்றுவாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 18, 2021

காங்கிரஸின் அடுத்த தலைவர் ஜோதிமணி? வரலாற்றை மாற்றுவாரா?

காங்கிரஸின் அடுத்த தலைவர் ஜோதிமணி? வரலாற்றை மாற்றுவாரா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் யார் என்ற பேச்சு அக்கட்சி வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2019 பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அந்த பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்ற கேள்வி அக்கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஒவ்வொரு கட்சியிலும் கோஷ்டிகள் இருக்கலாம், ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது தலைதூக்கும் கோஷ்டி மோதல்கள் அரசியல் அரங்கையே அதிரச் செய்யும். உட்கட்சி ஜனநாயகம் என அதற்கு தனிப்பெயரும் அதற்கு அக்கட்சியால் வழங்கப்படும்.

தற்போது தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் அதற்கும் பலத்த போட்டி உருவாகியுள்ளது. கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், மாணிக் தாகூர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad