ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல்!

ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்பதில் சிக்கல்!

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அதிபர் மாளிகையை கைப்பற்றி தலிபான்கள் உள்ளே அமர்ந்ததையடுத்து, அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார். பூமியில் ரத்தக்களறி நடக்கக் கூடாது என்பதற்காகவே நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

காபூலை கைப்பற்றிய தினம் ஆப்கான் மக்களுக்கும் முஜாஹிதீன்களுக்கும் சிறந்த நாள் ஆகும். 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. எங்கள் நாட்டுக்கு எது சுதந்திரமோ அதை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை நாங்கள் அடைந்துவிட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே,

ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறும் ஐநா வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். நிலைமையை கட்டுப்படுத்த, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

விமான நிலையத்தில் குவிந்துள்ள லட்சக்கணக்கானோர் விமான ஓடு தளங்களில் குவிந்துள்ளதால், விமானங்களை பாதுகாப்பாக தரையிறக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து, காபூல் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவையையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பவிருந்த ஏர் இந்தியா விமானம் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியர்களை அங்கிருந்து மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்கள் மற்றும் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad