ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் பணி தீவிரம்: தலிபான்களிடம் சிக்கிய முக்கிய கருவி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் பணி தீவிரம்: தலிபான்களிடம் சிக்கிய முக்கிய கருவி!

ஆப்கனில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் பணி தீவிரம்: தலிபான்களிடம் சிக்கிய முக்கிய கருவி!

அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும் நாடு முழுவதையும் தலிபான்கள் ஆக்கிரமிக்க தொடங்கினர். கடந்த வாரம் தலைநகர் காபூலை அவர்கள் கைபற்றியதையடுத்து, முன்னாள் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதையடுத்து, புதிய அரசை அமைக்க தலிபான்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், ஆப்கனை விட்டு பலரும் வெளியேறி வருகின்றனர். வெளிநாடுகள் தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை திரும்பி அழைத்துவர தொடர்ந்து முயன்று வருகின்றன. ஆனால், காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதற்றமே நிலவி வருகிறது. காபூல் விமான நிலையத்திலிருந்து கடந்த ஐந்து நாட்களாக 18 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் மீட்புப் பணிகளை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஆப்கனை விட்டு வெளியேறுபவர்களை தலிபான்கள் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் ஆப்கனில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகள் ஏற்கனவே வெளியேறி விட்டனர். தொடர்ந்து, அங்கு பணியாற்றிய தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள், வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் என பலரையும் தொடர்ந்து அமெரிக்கா அழைத்து வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பிறகு தொடர்ந்து அமெரிக்க மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஆகஸ்ட் தொடக்கத்தில் இருந்து இதுவரை 14 ஆயிரம் பேர் அமெரிக்கா திரும்பியுள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 11 விமானப்படை விமானங்கள் காபூலில் இருந்து இயக்கப்பட்டு 3000 அமெரிக்கர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.




தங்களது நாட்டவர்களை மீட்க அமெரிக்க தடுமாறுவதாக தகவல் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்கர்களுக்கு எதாவது நேர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad