தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன தகவல்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்பட்ட நிலையில் அரியலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பட்டு மூண்டது. இதற்கு மத்தியில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

மேல்நிலை பள்ளிகளை திறந்து இன்னும் 2 வாரம் கூட ஆகாத நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது அரசுக்கு சவாலான காரியம் என்று விவாதங்கள் நடந்தன. இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் இதுதொடர்பாக முக்கிய தகவலை கூறியுள்ளார்.

மீதமுள்ள வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர்
''தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து 15ம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை, தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad