10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு ரத்து: விண்ணப்பித்தவர்கள் ஆல்பாஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 11, 2021

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு ரத்து: விண்ணப்பித்தவர்கள் ஆல்பாஸ்!

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு ரத்து: விண்ணப்பித்தவர்கள் ஆல்பாஸ்!

தமிழகத்தில் கொரோனா பரவல் எச்சரிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து, கடந்த ஜூன் 19-ஆம் தேதி மாணவர்களின் மதிப்பெண் விவரம் வெளியானது. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற மதிப்பெண்களின் அதிருப்தி இருந்தால் துணை தேர்வு எழுதலாம் என்றும் அரசு அறிவித்தது.

மேலும், மாணவர்களுக்கு மட்டுமின்றி கடந்த மே மாதம் விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்களும் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பிளஸ் 2 துணை தேர்வெழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தமிழக அரசு விலக்களித்தது. அதனை தொடர்ந்து செப்டம்பரில் நடக்கவிருந்த 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது.

அதுகுறித்த அறிவிப்பில், செப்டம்பர் 2021-ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 11-ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவிவரும் கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்'' என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad