அச்சுறுத்தும் டெங்கு: 40 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி - விரைந்தது மத்தியக் குழு!
உத்தர பிரதேச மாநிலத்தில், டெங்குக் காய்ச்சல் காரணமாக, 40 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து காய்ச்சலை
கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மத்தியக் குழுவை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில், டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever) காரணமாக, 40 குழந்தைகள் உட்பட 50 பேர் பலியாகி உள்ளனர்.
இது குறித்து தெரிவித்த பிரோசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரா விஜய் சிங், இது மிகவும் ஆபத்தான காய்ச்சல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாகவும், இது குழந்தைகளை அதிகளவில் பாதித்து ரத்தக்கசிவு ஏற்படச் செய்வதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment