ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் தலிபான்கள்! - ஆப்கனில் நடப்பது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் தலிபான்கள்! - ஆப்கனில் நடப்பது என்ன?

 ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் தலிபான்கள்! - ஆப்கனில் நடப்பது என்ன?

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் அவர்கள் திணறி வருகின்றனர்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதை அடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி, சிறப்பு விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் தலைமையிலான அமைச்சரவை பட்டியல் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

​யார் தலைமையில் ஆட்சி?

ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலிபான் உயர் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா தலைமையில் தான் அதிபர் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

​பஞ்சஷிரை நெருங்க முடியாத தலிபான்கள்

ஆப்கனை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றினாலும், பஞ்சஷிர் மாகாணத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. தலிபான் எதிர்ப்பு போராளிகள் குழு தலிபான்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். பஞ்சஷிர் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் தலிபான் படைகள் ஈடுபட்டுள்ளன. அவர்களை எதிர்த்து பஞ்ச்ஷிர் போராளிகள், கடுமையாக போர் புரிந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad