ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு என்ன?

ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் முடிவு என்ன?

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனவே உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதேசமயம் பள்ளிகள் திறப்பால் தொற்று பரவல் அதிகரித்துவிடுமோ என்ற அச்சமும் நிலவியது.
பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் பெரியளவில் பாதிப்புகள் பதிவாகவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு உறுதியானதும் குறிப்பிட்ட அந்தப் பள்ளிக்கு மட்டும் ஓரிரு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஒரு வாரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காதது நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

மாணவர்கள் பல மாதங்களாக வீடுகளுக்குள்ளே அடங்கிக் கிடந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு உற்சாகமாக சென்று வருகின்றனர். 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து செப்டம்பர் 14ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்தவுள்ளார்.

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வார காலத்தில் பாதிப்புகள் அதிகரிக்கவில்லை, மேலும் ஒரு வாரம் நிலைமையை கவனித்து செப்டம்பர் 14ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்கிறார்கள். முதற்கட்டமாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கவும் பின்னர் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில்.

No comments:

Post a Comment

Post Top Ad