கொஞ்சம் சறுக்கினாலும் மீண்டும் பாஜக ஆட்சி தான்; கருத்துக்கணிப்பு முடிவுகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

கொஞ்சம் சறுக்கினாலும் மீண்டும் பாஜக ஆட்சி தான்; கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கொஞ்சம் சறுக்கினாலும் மீண்டும் பாஜக ஆட்சி தான்; கருத்துக்கணிப்பு முடிவுகள்!

இந்தியாவின் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி/மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பின்னர் நவம்பர் மாதத்தில் ஹிமாச்சல் பிரதேசத்திலும், டிசம்பரில் குஜரத் மாநிலத்திற்கும் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார் என்பது தொடர்பாக ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 403 தொகுதிகளில் 325 இடங்களில் பாஜக அபார வெற்றி பெற்றிருந்தது. இதைவிட 60 தொகுதிகள் குறைவாக பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், ஆட்சிக் கட்டிலில் அமர பாஜகவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜக 259-267 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 109-117 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 12-16 இடங்களிலும், காங்கிரஸ் 3-7 இடங்களிலும், பிற கட்சிகள் 6-10 இடங்களிலும் வெற்றி பெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை பாஜக 0.4 சதவீதம் அதிகமாகவும், சமாஜ்வாதி கட்சி 6.6 சதவீதம் அதிகமாகவும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி 6.5 சதவீதம் குறைவாகவும், காங்கிரஸ் 1.2 சதவீதம் குறைவாகவும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி அளிப்பதாக 44 சதவீத பேரும், கொஞ்சம் திருப்தி என்று 18 சதவீத பேரும், திருப்தியில்லை என்று 37 சதவீத பேரும், கருத்து தெரிவிக்கவில்லை என்று 1 சதவீத பேரும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad