பணியாளார்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

பணியாளார்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

பணியாளார்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதையடுத்து, துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6 ஆயிரத்து 761 மேற்பார்வையாளர்கள் 15090 விற்பனையாளர்கள் மற்றும் 3158 உதவி விற்பனையாளர்கள் ஆக மொத்தம் 25009 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும். மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார்.

அதன்படி, 2021 ஏப்ரல் மாதம் முன்தேதியிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 500 ரூபாய் கூடுதலாக தொகுப்பூதியம் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 15.01 கோடி நிதி கூடுதல் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி ரூபாய் 5 கோடி மானியமாக வழங்கப்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad