டாஸ்மாக் ஆன்லைன் விற்பனை: அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தின் போது குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசுகையில், “தமிழக அரசு
டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பரிசீலித்து வருவதாக
செய்தித்தாள்களில் படித்தேன். அப்படி ஒரு முடிவை தமிழக அரசு எடுக்கக்கூடாது. கடந்த ஆட்சியில் 1000 மதுபானக் கடைகள் குறைக்கப்பட்டன.
தமிழக அரசு மதுபானங்களை ஆன்லைனில் விற்க நேர்ந்தால் சில நேரங்களில் ஆண்கள் ஆர்டர் செய்து விட்டு வெளியே செல்லக்கூடிய சூழல் வரலாம். அப்போது வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் அதை வாங்கி வைக்க வேண்டிய நிலை வரும், அதனால் அக்கம் பக்கத்து வீட்டார் அவர்களை தவறாக எண்ணக் கூடிய நிலை உருவாகும். எனவே சமூகத்தில் இது மாதிரியான குழப்ப நிலைகளை தவிர்க்க இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்க
ு ஆயத்தீர்வை துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி, தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை அறவே கிடையாது. இந்த அரசு தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனையை அறவே அனுமதிக்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுவின் மூலம் வரும் வருவாய் கடந்த ஓராண்டில் மட்டும் 75 சதவீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment