சொன்னா கேளுங்கபா; சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ மீது கடுப்பான ஸ்டாலின்!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேசமயம் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழலில்
சட்ட முன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தின் போது தலைவர்களை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் இந்த கட்டளையை பிறப்பிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
புகழ்பாடக் கூடாது
ஆனால் சில அமைச்சர்களும், திமுக எம்.எல்.ஏக்களும் தலைவர்கள் புகழ்பாடுவதை அவ்வப்போது நிகழ்த்தி முதல்வரிடம் எச்சரிக்கைக்கு ஆளாகி வருகின்றனர். முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் உள்ளிட்டோர் முதல்வரின் உத்தரவை மீறி புகழ்பாடி இருந்தனர். அப்போது உடனடியாக கண்டனத்தை பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னை புகழ்ந்து பேசினால் திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். அவை நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதையும் அளவாக வைத்துக்
கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
வரவேற்பை பெற்ற செயல்பாடுகள்
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சியினரைப் பற்றி தவறுதலாக பேசினால் கூட முதல்வர் எழுந்து மன்னிப்பு கேட்கிறார். முதல்வர் ஸ்டாலினின் இத்தகைய செயல்பாடுகள் எதிர்க்கட்சி தரப்பிலும் பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், இதுபோன்ற ஒரு கண்ணியமிக்க சட்டமன்றத்தை நான் பார்த்ததில்லை என்று கூறினார். இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரின் போது கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொதுவெளியில் பேசிய கருத்துகளை சுட்டிக் காட்டி அவையில் பேசிக் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment