தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!

தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கக் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் ஒரு பக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகளுடன், அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல் ஆலோசனைக் கூட்டத்தில், தென்காசி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் விரைவில் தேர்தல் தேதி வெளியாக உள்ள நிலையில், அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளையும் முழுமையாக கைப்பற்றி 100 சதவீத வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று, தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad