செப்டம்பர் 5: குறையும் பலி எண்ணிக்கை, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

செப்டம்பர் 5: குறையும் பலி எண்ணிக்கை, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு..!

செப்டம்பர் 5: குறையும் பலி எண்ணிக்கை, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,22,678 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது 16,282 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 165 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 544983 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 534828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8410 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 237203 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 232712 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2280
பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 165904 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 162391 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2433
பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,583 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 4,22,21,793 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,607 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,71,378 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35,018 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad