கல்லூரி மாணவர்களுக்கு விடுதியில் இடமில்லை? - வலுக்கும் கோரிக்கை
''விடுதிகள் பற்றாக்குறையுள்ள கல்லூரிகளைக் கணக்கெடுத்து அவற்றுக்கு அருகில் புதிய மாணவர் விடுதிகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ்
வலியுறுத்தியுளளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது , தமிழ்நாடு முழுவதும்
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது , தமிழ்நாடு முழுவதும்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரும்பிய கல்லூரியில், விரும்பியப் பாடப்பிரிவில் இடம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாணவர்கள், தங்கிப் படிக்க விடுதிகளில் இடம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 143 அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் சராசரியாக 90% இடங்கள் நிரப்பப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள இடங்களும் அடுத்த சில நாட்களில் நிரப்பப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துக் கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், பெரும்பான்மையான மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் கிடைக்காததால் அவர்களால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை.
No comments:
Post a Comment