ஸ்டாலினுக்கு நன்றி, ஓபிஎஸ் மீண்டும் தனியாக அறிக்கை..!
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதாக அதிமுக சார்பில் ஓபிஎஸ் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களையும், சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கப் பாடுபட்டவர்களையும், தன்னலமற்ற மக்கள்
சேவை புரிந்தவர்களையும், மக்களின் உரிமைகளை மீட்கப் போராட்டங்களை நடத்தியவர்களையும்,
சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களையும் கவுரவிக்கும் வகையில், அவர்களுக்குத் திருவுருவச் சிலைகள் அமைப்பதையும், நினைவு மண்டபம் கட்டுவதையும், அரசுக் கட்டிடங்களுக்கு அவர்களின் பெயர்களை வைப்பதையும் அதிமுக
தனது ஆட்சிக் காலத்தில் வழக்கமாகக் கொண்டிருந்தது.
No comments:
Post a Comment