55 மீனவர்கள் சிறைபிடிப்பு: கடல்நோக்கி காத்திருக்கும் குடும்பங்கள்... இலங்கை கடற்படை அட்டூழியம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 19, 2021

55 மீனவர்கள் சிறைபிடிப்பு: கடல்நோக்கி காத்திருக்கும் குடும்பங்கள்... இலங்கை கடற்படை அட்டூழியம்

55 மீனவர்கள் சிறைபிடிப்பு: கடல்நோக்கி காத்திருக்கும் குடும்பங்கள்... இலங்கை கடற்படை அட்டூழியம்


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர், டிச 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து யாழ்பாணம் சிறைக்கு அனுப்பட்டனர்.
 இரண்டு தினங்களாக அடுத்தடுத்து ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்களின் 8 விசைப்படகுகள் , 55 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை, தொடர்ந்து கவலையில் மீனவர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை மீன்வளத் துறை அதிகாரியிடம் பெற்றுக்கொண்டு நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.


இந்த நிலையில், இன்று கரை திரும்ப உள்ள நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை நடுகடலில் வைத்து ராமேஸ்வரம் மீனவர்களின் 6 விசைப்படகுகள் 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர், டிச 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து யாழ்பாணம் சிறைக்கு அனுப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப் படகுகளையும் தலைமன்னார் தனுஷ்கோடி இடையே சிறைப்பிடித்து அதில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து தொடர்ந்து 8 விசைப்படகுகள், 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் மண்டபம் பகுதியில் இரண்டு தினங்களாக தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் உரிமையாளர்களின் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றி மீனவர்களை கைது செய்வதும், தொடர்ந்து ஆறு மாத காலமாக இதுபோன்ற செயல்களில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருவதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலையிலும் மீனவர்கள் இருப்பதாலும் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad