முதல்வர் பொங்கல் பிளான்...அமைச்சர் சூப்பர் அப்டேட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 28, 2021

முதல்வர் பொங்கல் பிளான்...அமைச்சர் சூப்பர் அப்டேட்!

முதல்வர் பொங்கல் பிளான்...அமைச்சர் சூப்பர் அப்டேட்!



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில், திறந்த வெளிக் கலையரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட கலை மன்றத்தின் முதல் கலைநிகழ்வு தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
உடல் முழுவதும் திருநீறு பூசி மனு அளிக்க வந்த நபர்; என்ன காரணம் தெரியுமா?

இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் உவரி பரதவர் கலியலாட்டம், மற்றும் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கலைக்குழுவினரின் எருதுவிரட்டு மேளம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது .

இதனைத்தொடர்ந்து எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளருமான நாறும்பூநாதன் எழுதிய நிலம், நீர், மனிதர்கள் என்ற புத்தகத்தை அமைச்சர் தங்கம்தென்னரசு வெளியிட சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும், காணி இன மக்களின வாழ்வியல் குறித்த ஆவணப் படத்தின் முன்னோட்ட காணொலியை வெளியிட்டனர்.

பின்னர் அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியதாவது:

நெல்லை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புக்களை உள்ளடக்கிய மாவட்டமாகும், போராட்ட களங்களிலும் முத்திரை பதித்த மாவட்டம் நெல்லை மாவட்டம்.

நாட்டுப்புற கலைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நசிந்து வருகின்றனர், அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, நாட்டுப்புற கலைகள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கலைநிகழ்வுகள் கோவை உள்பட மூன்று மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்திலும் நடத்த வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை கட்டாயம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கருகுறிச்சி அருணாசலத்தின் சொந்த ஊரான காருகுறிச்சியில் இசைப்பள்ளி அமையவேண்டும் என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், மற்றும் கலை பண்பாட்டுத்துறையினர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad