அதிர்ச்சி... கடைசி வாரத்தின் ஆரம்பமே சொதப்பல்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 26, 2021

அதிர்ச்சி... கடைசி வாரத்தின் ஆரம்பமே சொதப்பல்...

அதிர்ச்சி... கடைசி வாரத்தின் ஆரம்பமே சொதப்பல்...




இன்றைய பங்குச் சந்தையில் ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 16900 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. ஆர்பிஎல் பேங்க் பங்குகள் சரிந்தன.
2021ஆம் ஆண்டின் கடைசி வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை சரிவுடன் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகம் ஆரம்பமானது முதல் பங்குச் சந்தை சரிவில் உள்ளதுடன் மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்து 56948 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி கடந்த வர்த்தகத்தில் 17003 புள்ளிகளிலிருந்து தற்போது சரிந்து 16937 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி துறை குறியீடுகளில் நிஃப்டி பேங்க், நிஃப்டி ஆட்டோ உள்ளிட்ட அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நிஃப்டி பார்மா துறை குறியீடு மட்டும் ஏற்றத்தில் உள்ளது. 20 புள்ளிகள் அதிகரித்து 13510 புள்ளிகளாக உள்ளது.


அதேபோல், சென்செக்ஸ் ஆரம்ப வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட சில பங்குகள் சரிவில் ஆரம்பமானது.

காலை 10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிந்த நிலையில், 56986 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 52 புள்ளிகள் சரிந்து 16958 புள்ளிகளாக இருந்தது. அதேபோல், நிஃப்டி மிட்கேப் 0.34 சதவீதம் சரிந்து 29511 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் ஸ்மால்கேப் 0.11 சதவீதம் அதிகரித்து 28398 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி ஐடி, நிஃப்டி பேங்க் ஆகியவையும் சரிந்தன. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், வக்ராங்கி நிறுவன பங்குகள் 9 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கு 46 ரூபாய்க்கும், அசோகா பில்ட்கான் பங்கு 7 சதவீதம் அதிகரித்து 99 ரூபாய்க்கும் லாபத்தில் உள்ளன. டாடா டெலி, சுஸ்லான் எனர்ஜி பங்குகளும் லாபத்தில் உள்ளன. மறுபுறம் ஆர்பிஎல் பேங்க் 19 சதவீதம் சரிவை சந்தித்து அதன் பங்கு ஒன்று 138 ரூபாய்க்கு விற்பனையானது. பந்தன் வங்கி, பீஇஎம்எல் இந்தஸ் இந்த வங்கி பங்குகளும் சரிவை சந்தித்து நஷ்டத்தில் உள்ளன.

2021 ஆம் ஆண்டில் குறைவான 12 சதவீத வருமானத்துடன், முன்னணி உயர்தர தனியார் துறை வங்கிகள் மோசமாகச் செயல்படுகின்றன. FII-களின் அதிக பங்குகள் மற்றும் நல்ல லாபம் ஈட்டிய இந்த பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வந்தாலும், பங்குச் சந்தையின் செயல்திறனை பாராட்டலாம் என்றும், 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீததிற்க்கு மேல் வளர்ச்சியடைந்தால், எதிர்பார்த்தபடி, பெரிய தனியார் துறை வங்கிகள் சிறப்பாகச் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2022 ஆண்டில் பங்குச் சந்தையை விட சிறப்பாக செயல்படும் என்றும் தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் வீட்டு மேம்பாட்டுத் துறைகள் நல்ல வருவாய் தரும் தெரிவுநிலையைக் கொண்டு மிகவும் மதிப்புமிக்கவையாக இருக்கும் எனவும். சந்தை திருத்தங்கள் இந்த பிரிவுகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளாக இருக்கும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad