உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி; மனசாட்சியே கிடையாது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 26, 2021

உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி; மனசாட்சியே கிடையாது!

உதயநிதி ஸ்டாலினை வச்சு செஞ்ச டிடிவி; மனசாட்சியே கிடையாது!



கோவையில் உதயநிதி ஸ்டாலினுக்காக நடந்த பொதுக்கூட்டம் தொடர்பாக டிடிவி தினகரன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் முகக்கவசம் அணியாமலும், போதிய சரீர இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்படியெனில் ஆளுங்கட்சி நடத்தும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாதா? என்று சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், ”புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமைக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை,

உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று திமுக அரசுக்கு உலக மகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது. மக்களைப் பற்றி கவலையும் கிடையாது!

”தீய சக்தி கூட்டம்” என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்?!” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கோவையில் நடந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவை மக்களுக்கு குசும்பு அதிகம். இங்கு வரவேற்பு எல்லாம் சிறப்பாக இருக்கும். ஆனால் தேர்தலில் மட்டும் காலை வாரிவீட்டீர்கள் என்று நக்கலாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து உழைத்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் திமுக கோட்டைவிட்டாலும் கோட்டையை பிடித்து விட்டோம். நம்முடைய அடுத்த இலக்கு கோவையில் திமுக 100 சதவீத வெற்றியை பெறுவது தான். அதுவரை ஓயக்கூடாது என்று கட்சியினருக்கு வலியுறுத்தினார்.


No comments:

Post a Comment

Post Top Ad