மகாத்மா காந்தியைப் பற்றி தப்பா பேசிய.. சர்ச்சை சாமியார் அதிரடி கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

மகாத்மா காந்தியைப் பற்றி தப்பா பேசிய.. சர்ச்சை சாமியார் அதிரடி கைது!

மகாத்மா காந்தியைப் பற்றி தப்பா பேசிய.. சர்ச்சை சாமியார் அதிரடி கைது!


மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவதாக பேசிய சாமியார் காளிசரண் மகாராஜ் கைது செய்யப்பட்டார்.
மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக நாதுராம் கோட்சேவை நான் வணங்குகிறேன் என்று பேசிய சர்ச்சை சாமியார் காளிசரண் மகாராஜ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சாமியார்கள் சர்ச்சையாக பேசுவது நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக வழக்குகளும் போடப்படுகின்றனர். சிலர் கைது செய்யப்படுகின்றனர். பலர் கண்டு கொள்ளாமல் விடப்படுகின்றனர்.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த இந்து மத மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பல சாமியார்கள், முஸ்லீம்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில் சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த இந்து மத மாநாட்டில் பேசிய காளிசரண் மஹாராஜ் என்ற இளம் சாமியார் மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் உடனடியாக காளிசரணைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. சுதந்திரப் போராட்ட தியாகிகளும் காளிசரண் பேச்சுக்கு வேதனையை வெளியிட்டனர்.

இதையடுத்து ராய்ப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் பேரில் காளிசரணைக் கைது செய்ய முடிவெடுத்தபோது, அவர் மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோ அருகில் உள்ள பாகேஸ்வர் தம் என்ற இடத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று காளிசரணைக் கைது செய்தனர்.

இத்தகவலை மாவட்ட எஸ்.பி. பிரஷாந்த் அகர்வால் உறுதி செய்துள்ளார். அவரை சாலை மார்க்கமாக இன்று மாலை ராய்ப்பூர் கோர்ட்டில் கொண்டு வந்து ஆஜர்படுத்தவுள்ளனர். இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் அகோலாவிலும் சாமியார் காளிசரண் மீது வந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காளிசரண் மகாராஜ் கைது குறித்து சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில், காளிசரண் கைது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கிறோம். அவரது வழக்கறிஞருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை 24 மணி நேரத்தில் கோர்ட்டில் நிறுத்துவோம் என்றார்.

வீடு கொடுத்த ஹவுஸ் ஓனரும் கைது

இதற்கிடையே, கஜூராஹோ அருகில் காளிசரண் தங்கியிருந்தது வாடகை வீடாகும். அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளரை தற்போது மத்தியப் பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad