பசு மற்றும் கன்றுக்குட்டியை வளர்க்கும் போலீஸ் ஸ்டேஷன்: ஆரோவில்லில் இப்படி ஒரு சம்பவம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

பசு மற்றும் கன்றுக்குட்டியை வளர்க்கும் போலீஸ் ஸ்டேஷன்: ஆரோவில்லில் இப்படி ஒரு சம்பவம்!

பசு மற்றும் கன்றுக்குட்டியை வளர்க்கும் போலீஸ் ஸ்டேஷன்: ஆரோவில்லில் இப்படி ஒரு சம்பவம்!



வழக்கு ஒன்றில் தீர்வு எட்டப்படாததால் பசு மற்றும் கன்றுக்குட்டியை காவல் நிலையமே வளர்க்கும் சம்பவம் ஆரோவில் பகுதியில் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக், 60; இவர் வளர்த்து வந்ததாக கூறப்படும் பசு மாடு, 10 நாட்களுக்கு முன் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையில், கூட்ரோட்டைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 28, என்பவரின் வீட்டில், மாடு ஒன்று கன்று ஈன்றுள்ள தகவல் அசோக்கிற்கு தெரிய வந்தது. விக்னேஸ்வரனின் வீட்டிற்கு விரைந்த அசோக், தன்னுடைய மாடு என கூறி கேட்டுள்ளார். அவர் தராததால் பசு மாட்டை மட்டும் தனது வீட்டிற்கு ஓட்டி வந்து விட்டார்.
தகவலறிந்த விக்னேஸ்வரன், அசோக் வீட்டிற்குச் சென்று, தன்னுடை மாட்டை ஏன் ஓட்டி வந்துள்ளீர்கள் எனக் கேட்டுள்ளார்.

மாடு யாருடையது என்பதை விசாரித்து முடிவு செய்ய திட்டமிட்ட போலீசார் பசு மாடு தங்களுடையது என்பதற்கான ஆதாரத்தை எடுத்து வருமாறு கூறி இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், பிரச்னை முடிவுக்கு வரும் வரை பசுவையும், கன்றையும் பிரிக்க வேண்டாம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து கட்டும்படி அசோக், விக்னேஸ்வரனிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, இருவரும் பசுவையும், கன்றையும் ஓட்டி வந்து ஆரோவில் போலீஸ் நிலையத்தில் கட்டினர். மூன்று நாட்களாக பசுவுக்கும், கன்றுக்கும் வைக்கோல் போட்டு போலீசார் மாடு கன்றுக்குட்டியை பராமரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad