கடல் வழியாக எஸ்கேப்? ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்த போலீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 24, 2021

கடல் வழியாக எஸ்கேப்? ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்த போலீஸ்!

கடல் வழியாக எஸ்கேப்? ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்த போலீஸ்!



தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க, கடலோர எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடல் வழியாக வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க கடலோர எல்லைகளில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் வசம் பால்வளத்துறை இருந்தது. ’மோடி எங்கள் டாடி’ என பாஜகவிற்கு மிகவும் நெருக்கமான கருத்துகளை தொடர்ச்சியாக கூறி வந்தவர். அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி கட்சி மேலிடத்தின் அதிருப்தியையும் சம்பாதித்தவர். இதனால் பாஜகவில் சேரப் போகிறாரோ என்ற யூகங்கள் முன்வைக்கப்பட்டன.

ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள், நெருக்கமான அரசியல் வட்டாரம் என 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மதுரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர். ஆனால் இதுவரை எங்கிருக்கிறார் என்று கண்டறியப்படவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்நிலையில் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்புகள் இருப்பதால் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தூத்துக்குடி முதல் வேதாரண்யம் வரை, இந்தியா - இலங்கை இருநாட்டு எல்லைப் பகுதிகள், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகள், மீனவ கிராமங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad