சிஎம்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 200 பேருக்கு கொரோனா: அதே இடத்தில் சிகிச்சை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

சிஎம்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 200 பேருக்கு கொரோனா: அதே இடத்தில் சிகிச்சை!

சிஎம்சி மருத்துவர்கள், செவிலியர்கள் 200 பேருக்கு கொரோனா: அதே இடத்தில் சிகிச்சை!


வேலூர் மாவட்டத்தில் உள்ள முன்களப் பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று உருமாறி அதிகளவில் தீயாக பரவி வரும் சூழலில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் பாதிப்பிற்கு ஆளாகி உள்ள நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் ஊழியர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு(சிஎம்சி) நாடு முழுவதுமிருந்து பல்வேறு நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இம்மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர் ஊழியர்கள் சுகாதார பணியாளர்கள் என தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாவர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர்கள் அதே சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவியுள்ளது, வேலூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனால் மாவட்ட மக்கள் கடும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad