ஜனவரி 30: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

ஜனவரி 30: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

ஜனவரி 30: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!


தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 952 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 22 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 25 ஆயிரத்து 940 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 6 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 216 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 13 ஆயிரத்து 251 பேர் ஆண்கள்; 8,987 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 40 ஆயிரத்து 46 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரத்து 856 ஆகவும் அதிகரித்து உள்ளது. 26 ஆயிரத்து 624 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 84 ஆயிரத்து 470 ஆக உயர்ந்துள்ளது.

38 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்து உள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 544 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,508 ஆக இருந்த நிலையில் இன்று 3,998 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad