ஆறாத குழிப்புண்களையும் ஆற்றும் எருக்கம் தைலம்... எப்படி செய்வது... மூன்று வகை தயாரிப்பு முறை இதோ... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

ஆறாத குழிப்புண்களையும் ஆற்றும் எருக்கம் தைலம்... எப்படி செய்வது... மூன்று வகை தயாரிப்பு முறை இதோ...

ஆறாத குழிப்புண்களையும் ஆற்றும் எருக்கம் தைலம்... எப்படி செய்வது... மூன்று வகை தயாரிப்பு முறை இதோ...


எருக்கஞ்செடி என்றாலே அது விஷத்தன்மை வாய்ந்தது என்று நினைத்து அதை கையில் கூட தொட மாட்டோம். ஆனால் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக அதிலிருந்து செய்யப்படும் தைலம் எப்பேர்ப்பட்ட ஆறாத புண்களையும் ஆற்றும் சக்தி கொண்டது. அதை எப்படி தயாரிப்பது, அதன் பயன்கள் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
எருக்கு விஷத்தன்மை கொண்டது தான். ஆனால் அதற்கு நம்முடைய உடலில் இருக்கும் விஷத்தன்மையையும் நீக்கும் ஆற்றல் உண்டு. எருக்கில் இரண்டு வகையுண்டு. 1. நீல எருக்கு (பூக்கள் வெளிர் நீல நிறத்தில் இருக்கும்), 2. வெள்ளெருக்கு. இதில் இரண்டாவது வகையான வெள்ளெருக்கில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

​குதிகால் வலி

வெள்ளெருக்கம் செடியின் இலை, பூ. தண்டு, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. செங்கல்லை நன்றாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன்மேல் நன்கு பழுத்த எழுக்கம் இலைகளை வரிசையாக அந்த சூட்டின்மேல் அடுக்கி வைத்து, அதன்மேல் குதிகாலை நன்கு ஊன்றி வைத்திருக்க வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதை வாரத்தில் மூன்று நாட்கள் செய்யலாம். குதிகால் வலி, குதிகால் வாய்வுப் பிரச்சினைகள் நீங்கும்.

​ஆஸ்துமா தீர

வெள்ளெருக்கின் இலையை வெயிலில் நன்கு உலர்த்திக் காய வைத்து, அந்த இலைகளைத் தீயிட்டு அதன் புகையை லேசாக சுவாசிக்க, நாசி துவாரங்களின் வழியே புகை செல்லும்போது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இருமல் கட்டுக்குள் வரும்.

​உடல் வலி

எருக்கம் இலைகளை ஒரு துணியில் மூட்டை கட்டி, உப்பு ஒத்தடம் கொடுப்பது போல, அந்த மூட்டையை சூடாக்கி அதை மார்பு, வயிறு, உடலில் வலி இருக்கும் இடங்களில் வைத்து ஒத்தடம் கொடுத்து வர அந்த இடங்களில் இருக்கும் வலி தீரும்.

​எருக்குத் தைலம் 1

எருக்கம் இலைகளைக் கொண்டு பல்வேறு வகை தைலங்கள் தயாரிக்கலாம். வெவ்வேறு பிரச்சினைகளுக்கு வெவ்வேறு விதங்களில் இந்த தைலங்களைப் பயன்படுத்தலாம்.

சருமப் பிரச்சினைகள், தோலில் ஏற்படும் சொரி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களைச் சரிசெய்ய இந்த எருக்கம் தைலம் பயன்படுகிறது. அதை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

எருக்கம் இலைச்சாறு - 50 மில்லி

மஞ்சள் பொடி - 20 கிராம்

கடுகு எண்ணெய் - 150 மில்லி

தயாரிக்கும்முறை

எருக்கம் இலையை இடித்துச் சாறெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றுடன் மஞ்சள் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு, அந்த கலவையை கடுகு எண்ணெயில் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.

பயன்படுத்தும் முறை: அந்த எண்ணெயை சருமத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து நன்கு சோப்பு போட்டு வெந்நீரில் கழுவி வர வேண்டும்.

​தைலம் 2

தேவையான பொருள்கள்

எருக்கம் இலைச்சாறு - அரை லிட்டர்

நல்லெண்ணெய் - அரை லிட்டர்

வசம்பு - 20 கிராம்

பெருங்காயம் - 100 கிராம்

லவங்கப்பட்டை பொடி- 10 கிராம்

பூண்டு - 50 கிராம்

செய்முறை

எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் நன்றாக பொடி செய்து அவற்றை எண்ணெயையுடன் நன்கு காய்ச்சி, ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

காதில் சீழ் வடிதல், துர்நாற்றம் வீசுவது, காது வலி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த எண்ணெயை தினமும் ஒரு சொட்டு அளவு காதில் விட்டுவர வலி குறைய ஆரம்பிக்கும்.

​தைலம் 3

சர்க்கரை நோயுள்ளவர்களுக்குப் புண் ஏற்பட்டால் அது அவ்வளவு சீக்கிரம் ஆறவே ஆறாது. குறிப்பாக, கால்களில் ஏற்படும் குழிப்புண்கள் மாதக்கணக்கில் ஆறாமல் இருக்கும். புண் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அதுதான் நாளடைவில் கால் விரல்களை எடுக்கும் அளவுக்கு மோசமாக்கிவிடும். அத்தகைய கொடுமையான குழிப்புண்களையும் இந்த எருக்குத் தைலத்தைக் கொண்டு ஆற்றிவிட முடியும்.

தேவையான பொருள்கள்

எருக்க இலைச்சாறு

தேங்காய் எண்ணெய்

எருக்கம் இலைச்சாறையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை காட்டனில் நனைத்து ஆறாத புண்கள் உள்ள இடத்திலும், குழிப்புண்கள் உள்ள இடத்திலும் தினமும் இரண்டு முறை தடவி வர, புண்கள் மிக வேகமாக ஆறிவிடும்.

இந்த தைலத்தைத் தடவிய பின்பும் கைகளை சுத்தமாகச் சோப்பு போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad